{Tamil news }

தென் சென்னையின் அமைந்திருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலக் காட்டுப் பகுதி அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் நேற்று மாலை தொடங்கி எரிந்துவரும் தீயை உடனே அணைக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூழலியல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய சதுப்புநிலங்கள் பாதுகாப்பு - மேலாண்மை (NWCMP) திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலங்கள் என அறிவிக்கப்பட்ட 94 சதுப்புநிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்புநிலம். 1960களில் 6,000 ஹெக்டேராக இருந்தது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தற்போது 690 ஹெக்டேர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாள்தோறும் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பை கொட்டப்படும் சென்னை மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கு பள்ளிக்கரணையின் பெருங்குடி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்துவருகிறது. இதில் குப்பை கொட்டுவதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து மாநகராட்சியின் குப்பை கொட்டப்பட்டுவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7UIETPX
via

Comments