காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருப்பது கிரீன் ஹவுஸ் கேஸ் என்று அழைக்கப்படும் பசுமை இல்ல வாயுக்கள் தான். இதில் முக்கிய காரணியாக உள்ள கார்பனின் உமிழ்வை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு அறிக்கையில் (ஐபிசிசி) கூறப்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பல நாடுகள் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கார்பன் உமிழ்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றான “இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய நிலை அடையும்” பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மத்திய மாநில, அரசுகள் இது தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளது. கார்பன் உமிழ்வை குறைப்பதின் ஒரு பகுதியாக ‘கார்பன் கிரெடிட்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இந்த 'கார்பன் கிரெடிட்' தொடர்பான முழுமையான தகவல் இங்கே...
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/njhRTLB
via
Comments
Post a Comment