ஜெனீவா: சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை உலக நாடுகள் மிகவும் தீவிர பிரச்சினையாகப் பார்த்து வருகின்றன. காற்று மாசு காரணமாக மனிதர்களின் வாழ்நாள் குறைந்துகொண்டே வருவதாக ஆய்வு முடிகள் கூறுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இலக்கு வைத்து கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
Comments
Post a Comment