சென்னை: மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும், கரோனோ காலத்தில் தனிமைப்படுத்தல், சோதனை, அத்தியாவசிய உபகரணங்களின் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறைந்த தொகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment