புதுச்சேரி: ‘‘தூய்மையான கடற்கரை; பாதுகாப்பான கடற்கரை’’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இன்று நடத்தின. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடற்கரை தூய்மை படுத்தும் நிகழ்ச்சி, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடற்கரை தூய்மை உறுதிமொழியை வாசித்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலர் ஸ்மிதா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் "தூய்மையான கடற்கரை, பாதுகாப்பான கடற்கரை' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியை மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகியோர் பார்வையிட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Comments
Post a Comment