சென்னை நகரில் ‘நல்ல’ நிலையில் காற்றின் தரம்!

சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் (National Clean Air Programme) மூலம் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் உள்ள மாசுவை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி காற்றின் தரத்தை கண்காணிக்கவும், சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் பல்வேறு நகரங்களில் நிகல் நேர காற்று மாசு கண்காணிப்பு மானி அமைக்கப்பட்டுள்ளது.

Comments