ஊழியர்களுக்கு பணி ஓய்வுபோல, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 58 வயதை பூர்த்தியடைந்த யானைகளுக்கு ‘ரிடையர்மென்ட்’ வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று முதுமலையில் பணி ஓய்வு பெறுகின்றன முதுமலை, மூர்த்தி ஆகிய இரண்டு கும்கி யானைகள்.
1967-ம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் 5 வயது குட்டியாக பிடிக்கப்பட்ட யானைதான் முதுமலை. அப்போது முதல் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை வளர்ந்த பிறகு நீண்ட தந்தங்கள், கம்பீரமான உடல் அமைப்பு, பாகன் சொல்லுக்கு கீழ்படிதல் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மிக முக்கிய கும்கி யானையாக மாறியது முதுமலை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OUrzTtC
via
Comments
Post a Comment